தமிழ்
Surah At-Takwir ( The Overthrowing ) - Aya count 29
إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾
 சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ ﴿٢﴾
 நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾
 மலைகள் பெயர்க்கப்படும் போது-
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ ﴿٤﴾
 சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ ﴿٥﴾
 காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ ﴿٦﴾
 கடல்கள் தீ மூட்டப்படும்போது-
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ ﴿٧﴾
 உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ ﴿٨﴾
 உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
بِأَىِّ ذَنۢبٍۢ قُتِلَتْ ﴿٩﴾
 "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ ﴿١٠﴾
 பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ ﴿١١﴾
 வானம் அகற்றப்படும் போது-
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ ﴿١٢﴾
 நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ ﴿١٣﴾
 சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
عَلِمَتْ نَفْسٌۭ مَّآ أَحْضَرَتْ ﴿١٤﴾
 ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ ﴿١٥﴾
 எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ ﴿١٦﴾
 முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ ﴿١٧﴾
 பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ ﴿١٨﴾
 மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍۢ كَرِيمٍۢ ﴿١٩﴾
 நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍۢ ﴿٢٠﴾
 (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
مُّطَاعٍۢ ثَمَّ أَمِينٍۢ ﴿٢١﴾
 (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍۢ ﴿٢٢﴾
 மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ ﴿٢٣﴾
 அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍۢ ﴿٢٤﴾
 மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍۢ رَّجِيمٍۢ ﴿٢٥﴾
 அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
فَأَيْنَ تَذْهَبُونَ ﴿٢٦﴾
 எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌۭ لِّلْعَٰلَمِينَ ﴿٢٧﴾
 இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ ﴿٢٨﴾
 உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ ﴿٢٩﴾
 ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.